கோவை மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெறும் 25 சதவிகித இடஒதுக்கீடு சேர்க்கை

கோவை மாவட்டத்தில் 193 தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது. 

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-யின் படி தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்துள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் தேர்வு குலுக்கல் முறையில் நடத்தப்படுகிறது.

சொக்கம்புதூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு செய்யப்படுவதை துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில், தனியார் பள்ளிகளில் ஏழை, எழிய மாணவர்களுக்கான 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வழங்க ஜூலை 26-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 405 தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட 193 பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர் தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட கூடுதலாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கணேசமூர்த்தி எச்சரித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...