ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு மாநகராட்சிக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தும் தனியார் நிறுவனங்கள்- மாநகராட்சியின் நடவடிக்கை என்ன ?


கோவை மாநகராட்சி ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட 1 முதல் 100 வார்டுகளில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அனுமதியற்ற கட்டிடம் மற்றும் தனியார் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு வந்தது. கடந்த நவம்பர் மாதம் முதல் இன்றுவரை ரூபாய் 382.09 கோடி மதிப்பிலான 39.1 ஏக்கர் பொது ஒதுக்கீட்டு இடங்கள் மீட்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.



ஆனால், பொது ஒதுக்கீடு இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவரின் பெயரையோ? முகவரியோ? பற்றிய எந்த முழுமையான தகவலையும் மாநகராட்சி நிர்வாகம் வெளியிடவில்லை.

பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. மாநகராட்சி இதுபோன்ற செயல்களில் தாமதப்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தி வருவதாக கோவை மாநகராட்சியில் வசிக்கும் பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.



இதுகுறித்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல பகுதியில் வசிக்கும் பொதுமக்களில் ஒருவர் கூறுகையில், கோவை திருச்சி சாலை அருகில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 63-வது வார்டுக்குட்பட்ட திரு நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 41. 3 சென்ட் ரிசர்வ் சைட் பூங்கா ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தை பிரபல கல்யாண மண்டப உரிமையாளர்கள் ஆக்கிரமித்து டைனிங் ஹால் அமைத்து பல வருடங்களாக பயன்படுத்திக் கொண்டு பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். இதற்கும் மாநகராட்சி அதிகாரிகள் உடந்தையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது" என்றார்.



இது குறித்து கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் விமலா கூறுகையில், இந்த ஆக்கிரமிப்பு இடத்தை ஆய்வு மேற்கொண்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை கல்யாண மண்டப உரிமையாளர்கள் ஆக்கிரமித்து டைனிங் ஹால் கட்டியிருப்பது உறுதியாகியுள்ளது. எனவே, உரிய ஆவணத்தை தயார்படுத்தி மாநகராட்சி அலுவலர்களின் அனுமதியுடன் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

மேற்படி, மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடம் 41. 3 சென்ட் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் தகவல் கொடுத்தும் நகரமைப்பு அலுவலர்கள் மெத்தனம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

எனவே, இதனை உடனடியாக கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாரந்தோறும் ரிசர்வ் சைட்களை மீட்பது குறித்த முழுமையான தகவலை மாநகராட்சி சார்பில் வெளியிட வேண்டும். மேற்படி பூங்கா இடத்தையும் மீட்க அதிகாரிகளுக்கு உத்திரவிட வழங்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...