தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் - எம்.பி. டி.கே.ரங்கராஜன்.

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் 47 வது அமைப்பு தினத்தை முன்னிட்டு மக்கள் ஒற்றுமை கருத்தரங்கம், கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்றது. இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், மாநிலங்களை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கலந்து கொண்டார். 

இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது என்பது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது என குறிப்பிட்டார். மாடுகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்பனை செய்வதை தடை விதித்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பல மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், இதன்மூலம் நாடு தழுவிய ஒன்றுபட்ட நடவடிக்கை எடுக்க வைக்கும் பெருமை வாய்ந்த பணியில் அவர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்திய நாட்டின் ஜனநாயகம், மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டிய கடமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

அதிமுக பெரிய சிக்கலில் இருப்பதாகவும், தினசரி செத்து செத்து பிழைப்பதால் மத்திய பாஜக அரசிற்கு எதிராக பேச பயப்படுகிறது எனவும் அவர் கூறினார். வாக்காளர்கள் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி ஆரம்பிக்கலாம் என்பதால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், அது அவரது ஜனநாயக உரிமை என அவர் தெரிவித்தார். 

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் இராசாயணங்கள் கலக்கும் விவகாரத்தில் பல மர்மங்கள் இருப்பதால், அதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தினார். குடியரசு தேர்தலுக்கு பின் அதிமுக ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு, அரசியலில் சோதிடம் சொல்வது புத்திச்சாலித்தனம் இல்லை என பதிலளித்தார்.

Newsletter

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...