கலப்படம் செய்யும் பால் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஊடகங்களிடம் புலம்பும் ராஜேந்திரபாலாஜி அமைச்சராக இருக்க தகுதியற்றவர் எனவும், திராணி, தைரியம் இருந்தால் கலப்பட பால் நிறுவனங்களை அவர் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் செதியாளர்களிடம் தெரிவித்தார்.

கோவையில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவையில் அதிகளவு உற்பத்தி செய்யபடும் மோட்டார் பம்ப்செட் தயாரிப்பில் 3 விதமான ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகின்றது. இதே போன்று பல்வேறு தொழில்களில் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்ல முடியாத அரசாக கையாளாகாத அரசாக தமிழக அரசு உள்ளது.
தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 79 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னரே தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து இருக்கிறது. இரு கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்திற்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் தனியாக கட்டுப்பாடில்லாமல் லஞ்சம் வாங்குகின்றனர். அதிகாரிகள் மட்டத்திலும் லஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நிலையில் உள்ளது.

கோவையில் பா.ம.க இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கோவையில் அதிகளவு உற்பத்தி செய்யபடும் மோட்டார் பம்ப்செட் தயாரிப்பில் 3 விதமான ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகின்றது. இதே போன்று பல்வேறு தொழில்களில் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இந்த பிரச்சனைகளை மத்திய அரசிடம் கொண்டு செல்ல முடியாத அரசாக கையாளாகாத அரசாக தமிழக அரசு உள்ளது.
தற்போது தமிழகத்தில் ஒவ்வொருவர் மீதும் 79 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் வாங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னரே தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்து இருக்கிறது. இரு கட்சிகளின் ஆட்சியால் தமிழகத்திற்கு இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் தனியாக கட்டுப்பாடில்லாமல் லஞ்சம் வாங்குகின்றனர். அதிகாரிகள் மட்டத்திலும் லஞ்சம் அதிகரித்துள்ளது. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது நிலையில் உள்ளது.