ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் மே 30ம் தேதியன்று (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டன.

அதனைத்தொடர்ந்து, இன்று தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள உணவக உரிமையாளர்களும் தங்களது உணவகங்களை மூடி ஜிஎஸ்டி வரி அதிகரிப்பிற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து உணவகங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் அம்மா உணவகம் மட்டுமே வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளதால் மக்களின் கூட்டம் அம்மா உணவகங்களில் அலைமோதி வருகிறது.

இதனிடையே, மருத்துவப் பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி வரி அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் மருந்தக உரிமையாளர்களும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹோட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களின் இந்த முழுஅடைப்பு போராட்டம் காரணமாக சுமார் 500 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து, இன்று தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள உணவக உரிமையாளர்களும் தங்களது உணவகங்களை மூடி ஜிஎஸ்டி வரி அதிகரிப்பிற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து உணவகங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் அம்மா உணவகம் மட்டுமே வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளதால் மக்களின் கூட்டம் அம்மா உணவகங்களில் அலைமோதி வருகிறது.

இதனிடையே, மருத்துவப் பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி வரி அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் மருந்தக உரிமையாளர்களும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹோட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களின் இந்த முழுஅடைப்பு போராட்டம் காரணமாக சுமார் 500 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.