ஜிஎஸ்டி வரி உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று உணவகங்கள், மருந்தகங்கள் முழுஅடைப்பு போராட்டம்.

ஹோட்டல் பொருட்கள் மீது 5 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிப்பதை கண்டித்தும், அதனை குறைக்க வலிறுத்தியும் மே 30ம் தேதியன்று (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டன.



அதனைத்தொடர்ந்து, இன்று தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் உள்ள உணவக உரிமையாளர்களும் தங்களது உணவகங்களை மூடி ஜிஎஸ்டி வரி அதிகரிப்பிற்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.



அதன்படி, இன்று கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து உணவகங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் அம்மா உணவகம் மட்டுமே வழக்கம்போல் திறக்கப்பட்டுள்ளதால் மக்களின் கூட்டம் அம்மா உணவகங்களில் அலைமோதி வருகிறது.



இதனிடையே, மருத்துவப் பொருட்களின் மீதும் ஜிஎஸ்டி வரி அதிகளவில் விதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் மருந்தக உரிமையாளர்களும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹோட்டல், ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களின் இந்த முழுஅடைப்பு போராட்டம் காரணமாக சுமார் 500 கோடி ரூபாய் அளவு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...