பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தலைமையில் ரயில் நிலையங்களை பயணிகளுக்கு மேலும் உதவும் வகையில் மாற்றும் பல்வேறு நடவடிக்கைளின் ஒரு பகுதியாக, இன்று (மே 30) மதியம் சுமார் 3 மணியளில் கோவை ரயில் நிலையத்தின் 1-2, 3-4 நடைமேடைகள் மற்றும் குளிர்வசதி செய்யப்பட்ட பயணிகள் தங்கும் அறைகளில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வசதி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வசதி கழிப்பறையினை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மற்றும் இதர அதிகாரிகள் முன்னிலையில் மாற்றுத்திறன் பயணிகளின் உபயோகத்திற்காக திறந்து வைக்க உள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஸ்வர்கா பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாகவும், இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளதுடன், நுழைவு வாயில் ஸ்லைடிங் வசதி கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு வசதி கழிப்பறையினை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் மற்றும் இதர அதிகாரிகள் முன்னிலையில் மாற்றுத்திறன் பயணிகளின் உபயோகத்திற்காக திறந்து வைக்க உள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள ஸ்வர்கா பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள இந்த சிறப்புக் கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தங்களது வீல் சேர்களில் அமர்ந்து கொண்டு உள்ளே செல்ல வசதியாகவும், இரு புறங்களிலும் கைப்பிடிகள் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளதுடன், நுழைவு வாயில் ஸ்லைடிங் வசதி கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன.