மேட்டுப்பாளையம், கல்லாறு பகுதியில் அமைந்துள்ள சச்சிதானந்த ஜோதி நிதகேன் பன்னாட்டுப் பள்ளியில் சி.பி.எஸ்.இ பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. தேர்வு எழுதிய மாணவ மாணவியர் 32 பேரில், சி.வி. மௌனிஷா 480/500 மதிப்பெண்களும், எம். சரவணவேல் 474/500 , எம்.ஒய். யுவஷிகா 469/500 மதிப்பெண்களும் பெற்றுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். எஸ். கார்த்திகேயன், பொருளாதார பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ மாணவியரைப் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் ராமசாமி, பள்ளிச் செயலர் சிந்தனனக் கவிஞர் டாக்டர் கவிதாசன், துணைச் செயலர் ஞானபண்டிதன், பள்ளி முதுநிலை முதல்வர் நல்லாசிரியர் கணேசன், பள்ளி முதல்வர் உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.