கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல் ஆணையரிடம் இளைஞர் புகார்

கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக இளைஞர் ஒருவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.

கோவை, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் அவரது நண்பர்களான நேரு கல்லூரியில் பயிலும் ஹரி, கிஷோர், கண்ணன் ஆகிய மாணவர்களுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.

அப்போது மகேஷிடம் பெற்ற 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க முடியாத காரணத்தால், மாணவர்கள் தங்களின் மடிக்கணினி, கைபேசி போன்றவற்றை மகேஷிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது மாணவர்களின் கைபேசிய சோதித்த போது அதில் வாட்ஸ் அப் மூலம் கஞ்சா, கொக்கெயின், எல்.எஸ்.டி போதை பொருட்களை வாங்கி கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடம் மகேஷ் கேட்ட போது, மாணவர்கள் தகாத முறையில் பேசுவதோடு சிலர்  வழக்கறிஞர் என்ற பெயரில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கல்லூரிகளில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தனது உயிருக்கு பாத்துகாப்பு வழங்கக் கோரியும் மகேஷ் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறை சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...