கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக காவல் ஆணையரிடம் இளைஞர் புகார்

கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக இளைஞர் ஒருவர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று புகார் அளித்துள்ளார்.

கோவை, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் அவரது நண்பர்களான நேரு கல்லூரியில் பயிலும் ஹரி, கிஷோர், கண்ணன் ஆகிய மாணவர்களுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது.

அப்போது மகேஷிடம் பெற்ற 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க முடியாத காரணத்தால், மாணவர்கள் தங்களின் மடிக்கணினி, கைபேசி போன்றவற்றை மகேஷிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது மாணவர்களின் கைபேசிய சோதித்த போது அதில் வாட்ஸ் அப் மூலம் கஞ்சா, கொக்கெயின், எல்.எஸ்.டி போதை பொருட்களை வாங்கி கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடம் மகேஷ் கேட்ட போது, மாணவர்கள் தகாத முறையில் பேசுவதோடு சிலர்  வழக்கறிஞர் என்ற பெயரில் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து, கல்லூரிகளில் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், தனது உயிருக்கு பாத்துகாப்பு வழங்கக் கோரியும் மகேஷ் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து காவல்துறை சார்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...