அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கோவை வடக்கு எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, மேட்டுபாளையம் எம்.எல்.ஏ. ஒ.கே.சின்ராஜ் மற்றும் கவுன்சிலர் அசோக் குமார்  ஊள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அதிமுக இரு அணிகள் இணைப்பே வேண்டாம், உங்களுடன் இணைந்தால் எங்களுக்கு மரியாதை இருக்காது பணம், பதவிக்காக சசிகலா குடும்ப அணிக்கு சென்ற 122 எம்.எல்.ஏக்களும் பல பிரிவுகளாக இயங்குகின்றனர். ஒரே தலைமையின் கீழ் ஒபிஎஸ் அணி இயங்குகிறது இரண்டு முறை.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஒபிஎஸ். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் ஒபிஎஸ் அணி வெற்றி பெறும். கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளையும் ஒபிஎஸ் அணி கைப்பற்றும். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும் என்றார்.

பின்னர், பேசிய மேட்டுபாளையம் எம்.எல்.ஏ ஒகே.சின்ராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணங்களுக்கு விரோதமாக ஆட்சி நடக்கிறது ஜெ உயிருடன் இருந்த போது, அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் கையில் ஆட்சி உள்ளது இரண்டு அணிகள் இணைப்பு தொடர்பாக இதுவரை அழைப்பு இல்லை இரு அணிகள் இணைப்பு என எடப்பாடி அணியினர் கபட நாடகம் ஆடுகின்றனர் எடப்பாடி அணியுடன், ஒபிஎஸ் சேர்ந்தால் ஒபிஎஸ்க்கு வளர்ச்சியாக இல்லாமல் வீழ்ச்சியாக அமையும் என்றார்.



அதனை, தொடர்ந்து பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏக்கள் தொடக்கி வைத்தனர்.

Newsletter

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...