அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை, காந்திபுரம் கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில், கோவை வடக்கு எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, மேட்டுபாளையம் எம்.எல்.ஏ. ஒ.கே.சின்ராஜ் மற்றும் கவுன்சிலர் அசோக் குமார்  ஊள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அதிமுக இரு அணிகள் இணைப்பே வேண்டாம், உங்களுடன் இணைந்தால் எங்களுக்கு மரியாதை இருக்காது பணம், பதவிக்காக சசிகலா குடும்ப அணிக்கு சென்ற 122 எம்.எல்.ஏக்களும் பல பிரிவுகளாக இயங்குகின்றனர். ஒரே தலைமையின் கீழ் ஒபிஎஸ் அணி இயங்குகிறது இரண்டு முறை.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஒபிஎஸ். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் ஒபிஎஸ் அணி வெற்றி பெறும். கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளையும் ஒபிஎஸ் அணி கைப்பற்றும். உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெறும் என்றார்.

பின்னர், பேசிய மேட்டுபாளையம் எம்.எல்.ஏ ஒகே.சின்ராஜ், மறைந்த முதல்வர் ஜெயலலிதா எண்ணங்களுக்கு விரோதமாக ஆட்சி நடக்கிறது ஜெ உயிருடன் இருந்த போது, அவருக்கு எதிராக செயல்பட்டவர்கள் கையில் ஆட்சி உள்ளது இரண்டு அணிகள் இணைப்பு தொடர்பாக இதுவரை அழைப்பு இல்லை இரு அணிகள் இணைப்பு என எடப்பாடி அணியினர் கபட நாடகம் ஆடுகின்றனர் எடப்பாடி அணியுடன், ஒபிஎஸ் சேர்ந்தால் ஒபிஎஸ்க்கு வளர்ச்சியாக இல்லாமல் வீழ்ச்சியாக அமையும் என்றார்.



அதனை, தொடர்ந்து பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை எம்.எல்.ஏக்கள் தொடக்கி வைத்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...