கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!


கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருப்பிட மருத்துவ அலுவலரை தாக்கி செல்போனை பறித்து சென்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் ஊழியர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலராக செளந்திரவேல் பணிபுரிந்து வருகின்றார்.கடந்த 11ம் தேதி காரமடையை சேர்ந்த கிட்டான் என்பவர் கோவை அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15ம் தேதி சிகிச்சை பலன் இன்றி  உயிரிழந்துள்ளார். உறவினர்கள் யாரும் உடனடியாக வராததால் கடந்த 5 நாட்களுக்கு மேலாக கிட்டானின் உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுருந்தது.



இந்நிலையில் இன்று அவரது உடலை வாங்குவதற்கு வந்த அவரது உறவினர்கள் தங்கள் உறவினரான கிட்டுசாமியின் உடலை தருமாறு கோரியுள்ளனர்.அப்பொழுது பெயரில் குழப்பம் ஏற்படவே உரிய சான்றிதழ் வாங்கி வரும்படி மருத்துவ அலுவலர் செளந்திரவேல் அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து பத்திரிக்கை நிருபர் என கூறிக்கொண்டு வந்த கில்மோர் என்பவரும் அவருடன் வந்த சிலரும்,இருப்பிட மருத்துவ அதிகாரி சௌந்தரவேலுவிடம் வாக்குவாதம் செய்ததுடன்  தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதுடன்  செல்போனையும் பறித்து சென்றுள்ளனர்.இதனையடுத்து அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் ஒருவரை பிடித்து காவல் துறையில் ஓப்படைத்தனர்.

மேலும மருத்துவரை தாக்கி தப்பியோடியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மருத்துவமனை ஊழியர்கள் 
100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மருத்துவ அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகவும் மருத்துவமனையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் மருத்துவமனை ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் காவலர்கள் வழக்குபதிவு செய்துள்ளனர். கில்மோர் அக்னிகதிர் என்ற பெயரில் பத்திரிகை நடத்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய நபர்களை பிடிக்க போலிசார் தீவிர நடவடிகை எடுத்து வருகின்றனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...