கோவையில் தனியார் பள்ளிகளில் இடஒதுக்கிடு முறை பின்பற்றுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவையில் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி எச்சரித்துள்ளார்.

கோவை மாவட்ட துணை ஆட்சியரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரியுமான மோகன் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை- திருச்சி சாலையில் உள்ள புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் எஸ்சி, எஸ்டி இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்தும், மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி மோகன் தெரிவித்தார். மேலும், இந்த ஆய்வு தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும், இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை எனில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட கல்வி அதிகாரி தேன்மொழி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...