மனித- விலங்கு மோதலைக் குறைக்க ஆனைமலை புலிகள் காப்பகம் அருகே கூடுதல் வேட்டை தடுப்பு காவலர்கள்


"வனவிலங்கு பிரச்சனை"-யான யானைகள் அல்லது பிற உயிரினங்கள் மூலம் மனிதர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது என பல்வேறு ஆய்வுகள் மூலம் நிபுணர்களால் வாதிட்டவாறே உள்ளன. ஆனால், அவ்வாறான மோதல்கள் மனித நடவடிக்கைகளால் தான் ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக பொள்ளாச்சியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் யானை, மான், வரையாடு, குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். அவ்வாறாக வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் அங்குள்ள விலங்குகளுக்கு தாங்கள் கொண்டு வரும் உணவுகளை வழங்கி மகிழ்வர். 



இதில், பெரும்பாலும் மனிதர்களுடன் ஒன்றிணைந்து பழகுவது குரங்குகள் தான். சுற்றுலாப் பயணிகள் குரங்குகளுக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்குவதால் அவை தனது இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு மனிதர்களிடத்தில் விளையாட ஆரம்பிக்கிறது. மேலும், பயணிகள் கொண்டு வரும் பைகளை குரங்குகள் தானாகவே பறித்துவிட்டும் ஓடி விடுகின்றன. சில நேரங்களில் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும் குரங்குகள் சேதப்படுத்தி விடுகின்றன. 

மேலும், அங்குள்ள வரையாடுகள் இயல்பாகவே பயந்த குணம் உடையது. ஆனால், சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் சுற்றித் திரியும் வரையாடுகளின் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது உள்ளிட்ட இடையூறுகளில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் அங்கு வரும் யானைகளையும் சுற்றுலாப் பயணிகள் விட்டுவைப்பது இல்லை. புகைப்படம் எடுப்பது, கூச்சலிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் தங்களது இயல்பு வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு அங்குள்ளோரை தாக்குவதும், அல்லது மாறாக ஆனைமலை குடியிருப்பு பகுதியில் உள்ள மனிதர்களை தாக்குவதும் நடைபெறுகிறது.



இதனைத் தடுக்கும் விதமாக தற்போது வால்பாறை சாலையில் ஆழியார் முதல் அட்டகட்டி வரை 15 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள 15 ஊசிமுனை வளைவுகளிலும் கூடுதலாக 6 வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அவ்வழியாக வரும் சுற்றுலாப் பயணிகள் வன விலங்குகளிடையே இடையூறு ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...