சவுரிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கோவை சவுரிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் 4 டாஸ்மாக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, பொதுமக்கள் வாயில் கருப்பு தூணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை சவுரிபாளையம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வேறு பகுதியில் மூடப்பட்ட 2 மதுக்கடைகள் சவுரிபாளையத்தில் அருகருகே திறக்கப்பட்டன. ஒரே பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் கடைகள் இருப்பதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 4 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி, சவுரிபாளையம் பகுதி பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

அப்போது, சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானக்கடைகள் இல்லாத நிலையில், குடியிருப்பு, பள்ளிகள் நிறைந்த பகுதியில் 4 மதுபானக்கடைகள் இயங்கி வருவதால் மற்ற பகுதியில் இருந்து மது குடிக்க வருபவர்கள் திறந்தவெளியில் மது குடித்துவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இப்பகுதியில் 4 மதுபானக்கடைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், கடந்த சனிக்கிழமை இரு கோஷ்டி மோதல் காரணமாக அப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே ஒருவர் கொலை செய்யப்பட்டார். மதுபான கடைகளினால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறினர். 

மாவட்ட நிர்வாகம் உடனடியாக சவுரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால்  போராட்டங்களில் ஈடுபட உளளதாக தெரிவித்தனர்.

இதேபோல் சொக்கன்புதூர் பகுதியில் திமுக கோவை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர், மதுபான கடை அமைக்க கடை கட்டி வாடகைக்கு கொடுதுள்ளதாகவும் இங்கு கடை திறக்கப்பட்டால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக அமையும். எனவே மதுபான கடை அமைவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறி நாம் தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, பா.ஜ.க உள்ளிட்ட கட்சியினர் மனு அளித்தனர்.

Newsletter

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...