மழைவேண்டி பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம்

கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையங்கள் துறை சார்பில் இன்று (மே 22) மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இச்சிறப்பு வழிபாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். 



கோவை மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் மழைபொழிவின்றி நீர்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இந்து சமய அறநிலையங்கள்துறை சார்பில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவுறையின்படி, மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களில் மழைவேண்டி யாகம் நடத்த கோவில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நந்தியை கழுத்தழவு தண்ணீரில் மூழ்கச்செய்தும், மழைவேண்டி கோவில் குருக்களால் தேவாரங்கள் மூலம் சிவனை வேண்டியும், கஜபூஜை நடத்தியும், தீர்த்த தண்ணீர்களை தெப்பக்குளத்தில் பூஜித்து ஊற்றியும் வருண பகவானை வேண்டினர்.



அதுபோல் மாவட்டத்திலுள்ள முக்கிய சிவத்தலங்களான அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில், அருள்மிகு வனபத்திரகாளியம்மன் திருக்கோவில் தேக்கம்பட்டி, அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோவில் அன்னூர் வட்டம், அருள்மிகு இராமலிங்கசாமி திருக்கோவில் இடுகம்பாளையம் மேட்டுப்பாளையம் வட்டம், அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் கோட்டை கோவை நகர்வட்டம், அருள்மிகு பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி திருக்கோவில், உப்பாரவீதி கோவை நகர் உள்ளிட்ட இடங்களிலும் மழைவேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பனர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், கனகராஜ், கஸ்தூரி வாசு, உள்ளிட்டோரும், சமூக ஆர்வளர்களும், பொதுமக்களுமென ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...