செங்குளத்தை சுத்தப்படுத்தும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தொடர்ந்து பதினைந்தாவது வார களப்பணியாக இந்த வாரம் ஞாயிறன்று காலை 7 மணியளவில் கோவை தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் அமைந்துள்ள செங்குளத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த களப்பணியில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்களும் கலந்து கொண்டு  3 டன் அளவிலான பாலித்தீன் கழிவுகளும், கண்ணாடி பாட்டில்களையும் அகற்றினர்.



இதைத்தொடர்ந்து, செங்குளத்தில் களப்பணி முடிந்தவுடன் பேரூர் கோவிலுக்குச் சென்று அங்கு வடக்கு பிரகார சுவரில் இருந்த கல்வெட்டை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பார்வையிட்னர். அப்போது, அந்த கல்வெட்டு குறிப்புகளை கல்வெட்டியல் துறை ஆராய்ச்சி மாணவி சாந்தி விளக்கமளித்தார். அவருடன் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விஜய்-யும் கல்வெட்டு குறித்து விளக்கமளித்தார்.

இந்நிலையில், அணைக்குள் பாலம் கட்டி நெடுஞ்சாலைத்துறையும், குப்பைக்கிடங்கு அமைத்து உள்ளாட்சித் துறையும் ஆக்கிரமித்துள்ளன. இந்த அணை தற்பொழுது பேரூர் தமிழ் கல்லூரி அருகில் உள்ளது.



இந்த தடுப்பணையை தூர்வாரி நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதென கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரால் முடிவெடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளில் கோரிக்கை மனு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்வெட்டில் குறிப்பிட்டிருந்த தேவிசிறை அணை அதாவது தற்போதைய கோவை தடுப்பணை பார்வையிடப்பட்டது. அங்கு தண்ணீர் சென்ற அளவு குறித்து 1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் குறித்துவைத்துள்ள குறிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 



அதனைத் தொடர்ந்து சுண்டக்காமுத்தூரிர் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கிணறு ஒன்றும் பார்வையிடப்பட்டது. அந்த கிணறு சிதிலமடைந்து குப்பைகளால் நிறைந்து காணப்படுவதைத் தொடர்ந்து, அந்த கிணற்றை தூர்வாரி வரலாற்று சின்னத்தை மீட்டெடுப்பது என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினரால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...