உதகை மலர் கண்காட்சி இறுதி நாளில் குவியும் சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் கோடை காலத்தை முன்னிட்டு 121-வது மலர் கண்காட்சி கடந்த 19ம் தேதியன்று தமிழக முதலமைச்சரால் துவங்கப்பட்டது.

இந்த மலர் கண்காட்சியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில், 150 வகைகளைச் சேர்ந்த 5 லட்சம் பூக்கள் மற்றும் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. 



மேலும் ஒரு லட்சம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட மகாபலிபுரம் கடற்கரை கோயில், 6 ஆயிரம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட பறவை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட அரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மலர் கண்காட்சியை காண கண்காட்சி துவங்கப்பட்ட நாள் முதலே மக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது.



உதகை மலர் கண்காட்சியின் இறுதி நாளான இன்றும் தமிழகம் மட்டுமின்றி சுற்றுவட்டார மாநிலங்களில் இருந்து லட்சக் கணக்கான சுற்றுலா பணிகள் உதகையில் குவிந்து வருகின்றனர்.

இதனால், உதகை, நீலகிரிக்கு உட்பட்ட பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. மக்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் ஏராளமான காவல்துறையினர் உதகையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.



Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...