தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அதிகாரிகளால் ஈரோடு ரயில்நிலையத்தில் இரவு நேர திடீர் பயணச்சீட்டு பரிசோதனை

தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தின் வணிகவியில் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஈரோடு ரயில்நிலையத்தில் நேற்று (19,05,2017) இரவு 8 மணி முதல் இன்று (20,05,2017) அதிகாலை 4 மணி வரை திடீர் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொண்டனர்.  சேலம் தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் எம். ராஜேஸ்வரன் அவர்கள் தலைமையிலான 16 பேர் கொண்ட வணிகவியல் குழு மற்றும்சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை துணை ஆணையர் சிவதாஸ் தலைமையிலான 15 ரயில்வே பாதுகாப்புப் படையினர் குழு  மேற்கொண்ட இந்த திடீர் சோதனையில் 61 பேர் தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் 21,050 ருபாய் பயணச்சீட்டு தொகை மற்றும் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இந்த இரவு நேர பயணச்சீட்டு பரிசோதனைகளை மேற்கொண்டு செயல்படுத்தியமைக்கு சேலம் ரயில்வே  கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா மற்றும்  சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜுவின் அவர்களையும் வணிகவியல் மற்றும் ரயில்வே பாதுகாப்புபடையினரையும் பாராட்டியதுடன், இத்தகு சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.  ரயில் பயணிகளையும் தகுந்தத பயணச்சீட்டு பெற்று பயணம் செய்து ரயில்வேக்கு ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...