10-ஆம் வகுப்பு தேர்வில் கோவையில் 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி- முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி


கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 96.42 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 41 ஆயிரத்து 649 மாணவ, மாணவியர்களில் 40 ஆயிரத்து 156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 511 மாணவர்களில் 19 ஆயிரத்து 447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் தேர்ச்சி விகிதம் 94.81 சதவிகிதமாக உள்ளது. மேலும், தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 138 மாணவிகளில் 20 ஆயிரத்து 709 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களது தேர்ச்சி சதவிகிதம் 97.79 ஆக உள்ளது. 

கோவை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.42 சதவிகிதம், இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 519 பள்ளிகளில் 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது" என கணேசமூர்த்தி தெரிவித்தார்.

முன்னதாக, மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 11 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...