10-ஆம் வகுப்பு தேர்வில் கோவையில் 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி- முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி


கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 96.42 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்று இருப்பதாகவும் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 41 ஆயிரத்து 649 மாணவ, மாணவியர்களில் 40 ஆயிரத்து 156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதிய 20 ஆயிரத்து 511 மாணவர்களில் 19 ஆயிரத்து 447 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் தேர்ச்சி விகிதம் 94.81 சதவிகிதமாக உள்ளது. மேலும், தேர்வு எழுதிய 21 ஆயிரத்து 138 மாணவிகளில் 20 ஆயிரத்து 709 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களது தேர்ச்சி சதவிகிதம் 97.79 ஆக உள்ளது. 

கோவை மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் 96.42 சதவிகிதம், இது கடந்த ஆண்டைக்காட்டிலும் 0.2 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்வு எழுதிய 519 பள்ளிகளில் 238 பள்ளிகள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது" என கணேசமூர்த்தி தெரிவித்தார்.

முன்னதாக, மாநில அளவில் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 11 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...