முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, முதல்வர் விஜய்க்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


கோவை: தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய கருத்துகளை கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



சட்டமன்றத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை உருவ கேலி செய்யும் வகையில் முதல்வர் விஜய்யின் பேச்சு இருந்ததாக கூறி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, திமுக சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் செப். 12-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி மற்றும் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை எம்.பி. கணபதி ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, எம்.எல்.ஏ. சுதாகர், தீர்மானக்குழு செயலாளர் நா. கார்த்திக், துணை மேயர் வெற்றிச்செல்வன், முன்னாள் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம். தண்டபாணி, வழக்கறிஞர்கள் அருள்மொழி, ராஜீவ்காந்தி, கணேஷ்குமார், முன்னாள் எம்.பி. நாகராஜ் மற்றும் முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துச்சாமி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்செல்வன், திமுக தலைவரை மட்டுமின்றி அதன் சித்தாந்தத்தையும் விஜய் கொச்சைப்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். எந்த உருவத்தில் வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மேலும், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பதிலளிக்க முடியாத முதல்வர் விஜய், அமைச்சர்களை வைத்து ஆட்சி நடத்தி வருவதாகவும், அவரது ஆட்சியில் தொழில் வளர்ச்சி முடங்கியுள்ளதாகவும் துரை செந்தமிழ்செல்வன் விமர்சித்தார். கூட்டணியில் வெற்றி பெற்றவர்களின் ஆதரவால் ஆட்சி நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி பேசுகையில், திமுக தலைவர் மிசா காலத்தில் சிறையில் இருந்தபோது விஜய் பிறந்திருக்கவில்லை என கூறியதுடன், வரும் இடைத்தேர்தலில் திமுகவின் பலத்தை நிரூபிப்போம் என்றார்.

தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் விஜய்க்கு திமுக தக்க பதிலடி கொடுக்கும் என்றார்.

தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முதல்வர் விஜய்க்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், கண்டன கோஷங்களை எழுப்பியும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


Newsletter

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...

வரசித்தி விநாயகருக்கு வெள்ளி கவசம் - ரூ.10 லட்சம் நோட்டுகளால் அலங்காரம்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெ...

பர்மிட் தாமதம், கட்டண குழப்பம்: அமைச்சர் மீது ஆம்னி உரிமையாளர்கள் சாடல்

ஆம்னி பேருந்து அதிக கட்டண வசூல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் இன்றுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என உரிமையாளர் சங்கம்...