நீட் தேர்வை நோக்கி கல்விமுறையை மாற்றுவது தவறான விசயம்- திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

நீட் தேர்வை நோக்கி கல்விமுறையை மாற்றுவது என்பது தவறான விசயம் எனவும், சமச்சீர் கல்வியை மேம்படுத்த அதிமுக அரசு எதையும் செய்யவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது:-

நீட் மற்றும்  இந்தி திணிப்புக்கு எதிராக கோவையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைமையின் உத்திரவுபடி வந்துள்ளேன். முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் வீடு, நிறுவனங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைகள் குறித்து தற்போது கருத்து சொல்ல விரும்பவில்லை. 

தமிழகத்தில் நடைபெறும் அரசை தக்க வைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யக்கூடிய அரசாக தற்போதைய தமிழக அரசு இருக்கின்றது. தமிழகத்தில் அரசாங்கம் செயல்படவில்லை. மத்திய அரசிடம் இருந்து தங்களை காத்துக்கொள்ள தமிழகத்திற்கு விரோதமான, மக்கள் ஏற்றுக்கொள்ளாத விசயங்களை கூட மாநில அரசு ஏற்றுக்கொள்கின்றது. 

தன்னை காப்பாற்றிக்கொள்ளும் ஆர்வம் மக்களை காப்பாற்றுவதில் மாநில அரசுக்கு இல்லை. தமிழக மருத்துவர்களை தரம்குறைந்த மருத்துவர்களாக யாரும் பார்ப்பதில்லை. நீட் தேர்வினால் மட்டுமே தரமான மருத்துவக் கல்வி கொடுக்கமுடியும் என்பது தவறான வாதம். நீட் தேர்வை எதிர் நோக்கி  கல்விமுறையை மாற்றுவது  என்பது தவறான விசயம். 

ஆண்டுதோறும் சமச்சீர்கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும், கல்வியின் தரம் பரீசிலிக்கப்பட வேண்டும் என்ற நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமச்சீர் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சிக்கவில்லை'' என அவர் பேசினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...