கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வரை ஐந்து மண்டல அலுவலகங்களில் நடைபெறும். அடையாள அட்டை, ஆதார், வங்கி புத்தகத்துடன் கலந்துகொள்ளலாம் என ஆணையர் கட்டா ரவி தேஜா IAS அறிவித்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது. ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் செயல்படும் என மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS தெரிவித்துள்ளார்.


கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டல அலுவலகங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும். கிழக்கு மண்டலத்தில் கிழக்கு மண்டல அலுவலகம், சௌரிபாளையம் சமுதாயக் கூடம், காளப்பட்டி, உப்பிலிபாளையம், சேரன்மா நகர் ஆகிய பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களில் முகாம் அமையும். மேற்கு மண்டலத்தில் மேற்கு மண்டல அலுவலகம், வடவள்ளி, கவுண்டம்பாளையம், வேலாண்டிபாளையம், அண்ணா மார்க்கெட் வார்டு அலுவலகங்களில் முகாம் நடைபெறும்.


தெற்கு மண்டலத்தில் தெற்கு மண்டல அலுவலகம், செல்வபுரம், போத்தனூர், குறிச்சி, கோவைப்புதூர் பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களிலும், வடக்கு மண்டலத்தில் வடக்கு மண்டல அலுவலகம், ஆவாரம்பாளையம், காந்திமாநகர், சரவணம்பட்டி, துடியலூர் வார்டு அலுவலகங்களிலும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மண்டலத்தில் பிரதான அலுவலகம், இராமநாதபுரம் சமுதாயக் கூடம், காந்திபுரம், சிவானந்தா காலனி, இரத்தினபுரி பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களிலும் லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் நடைபெறும்.


சாலையோர வியாபாரிகள் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் இந்த முகாமில் கலந்துகொண்டு வங்கி கடன் பெறலாம். உணவு தொடர்பான வணிகம் செய்யும் சாலையோர வியாபாரிகள் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் விழிப்புணர்வு பயிற்சி பெற்று உரிமம் பெறவும் வாய்ப்பளிக்கப்படும். மேலும் இணையம் மூலம் பணப் பரிவர்த்தனையில் இணைந்து கொள்ள இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆணையர் Katta Ravi Teja IAS தெரிவித்துள்ளார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...