பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடிய நகைகளை விற்று, காதலனுக்காக பைக் வாங்கிக்கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜாய் பிரின்சி (19). இவர் பொள்ளாச்சியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி, ஊஞ்சவேலம்பட்டி அருகே வசிக்கும் குடும்ப நண்பரான தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டிற்கு ஜாய் பிரின்சி சென்றுள்ளார். அப்போது, வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகைகளை அவர் திருடியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நகைகள் காணாமல் போனது குறித்து தமிழ்ச்செல்வன் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது வீட்டிற்கு ஜாய் பிரின்சி வந்து சென்ற பின்னர் நகைகள் காணாமல் போனதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தங்க நகைகளை தான் திருடியதாக ஜாய் பிரின்சி ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், திருடிய நகைகளை பொள்ளாச்சியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்ததாகவும் மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், நகைகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணத்தில் தனது காதலனுக்காக KTM பைக் வாங்கிக் கொடுத்ததாகவும் மாணவி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதிய பைக்குடன் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மாணவி மீது மட்டுமே திருட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது காதலன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், காதலனின் அடையாளத்தை வெளியிடாமல் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து ஜாய் பிரின்சியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...