கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை - ஒற்றை சாளர முறைகோரி மனு

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கையை போல கலைக் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி, மதிமுக-வினர் இன்று கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மதிமுக இளைஞரணி மாநில செயலாளர் ஈஸ்வரன் தலைமையிலான அக்கட்சியினர், கோவை ரேஸ்கோர்ஸ் சாலை பகுதியில் உள்ள கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.

அதில், தமிழகத்தில் உள்ள கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் ஒற்றை சாளர முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய ஈஸ்வரன், தமிழகத்தில் இந்தாண்டு 7 லட்சம் மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பித்து உள்ளனர். கல்லூரிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கை போல, கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் ஒற்றை சாளர முறையினை அமல்படுத்த வேண்டும்.

ஒற்றை சாளர முறையினை அமல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க முடியும், மதிப்பெண்களுக்கு ஏற்ப விரும்பிய கல்லூரி மற்றும் பாடங்களை தேர்வு செய்ய முடியும்" என ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...