வரும் செப் 6-ம் தேதி காவலர் தினத்தையொட்டி, கோவையில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் வரலாறு, ஆயுதங்கள் மற்றும் பல்வேறு காவல் உபகரணங்களை பார்வையிடும் வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
வரும் செப்டம்பர் 6, காவலர் தினத்தையொட்டி, கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை, பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இலவசமாக பார்வையிட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுடன் இணைந்து காவலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதுடன், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் காவல்துறையின் வரலாறு, சாதனைகள், பணிகள், கட்டமைப்பு, அமைப்பு மற்றும் புலனாய்வு முறைகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் பயன்படுத்திய பழமையான ஆயுதங்கள், சீருடைகள், தர அடையாளங்கள், பதக்கங்கள், காவல்துறை சின்னங்கள் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட காவல் உபகரணங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
வீரப்பன் மற்றும் மலையூர் மம்பட்டியான் உள்ளிட்ட குற்றக் குழுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயுதங்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்து மாதிரிகளும் இடம்பெற்றுள்ளன.
எனவே, கோவை மாநகர பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வரும் செப்டம்பர் 6-ம் தேதி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை இலவசமாக பார்வையிட்டு, காவல்துறையின் வரலாறு மற்றும் சிறப்புகளை அறிந்துகொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களுடன் இணைந்து காவலர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடுவதுடன், காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் காவல்துறையின் வரலாறு, சாதனைகள், பணிகள், கட்டமைப்பு, அமைப்பு மற்றும் புலனாய்வு முறைகள் தொடர்பான பல்வேறு தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காவல்துறையினர் பயன்படுத்திய பழமையான ஆயுதங்கள், சீருடைகள், தர அடையாளங்கள், பதக்கங்கள், காவல்துறை சின்னங்கள் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் பயன்படுத்தப்பட்ட காவல் உபகரணங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன.
வீரப்பன் மற்றும் மலையூர் மம்பட்டியான் உள்ளிட்ட குற்றக் குழுக்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயுதங்களும் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதவிர, இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படையில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள், ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்து மாதிரிகளும் இடம்பெற்றுள்ளன.
எனவே, கோவை மாநகர பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் வரும் செப்டம்பர் 6-ம் தேதி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தை இலவசமாக பார்வையிட்டு, காவல்துறையின் வரலாறு மற்றும் சிறப்புகளை அறிந்துகொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.