குடியிருப்பு வாசிகள் குப்பைகளில் இருந்து பையோகேஸ் தயாரிக்க கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்- மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில்  100 சதவிகிதம் குப்பைகளை தரம் பிரித்து சேகரம் செய்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 4,041 நகரங்களின் 100 சதவிகிதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் 100 சதவீதம் குப்பைகளைத் தரம் பிரித்து சேகரம் செய்ய தேவையான விரிவான செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை குடியிருப்பு வாசிகள் தரம் பிரித்து தங்கள் சொந்த பொறுப்பில் அவர்களுடைய வளாகத்திலேயே மக்கும் குப்பைகளை பையோகேஸ் அல்லது உரம் தயாரிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும், மறுசுழற்ச்சிக்கு ஏதுவான பிற கழிவுகளை தனி நபருக்கு விற்பனை செய்யவோ அல்லது மாநகராட்சியிலும் ஒப்படைக்கலாம்.

மேலும், இதர குடியிருப்புகளில் மாநகராட்சி மூலம் 2,087 குப்பை சேகரிக்கும் தள்ளு வண்டிகள் மூலம் தரம் பிரித்த குப்பைகளை சேகரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகள் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி துப்புரவு பணியாளரிடம் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...