கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை நேரில் அளித்து பயன்பெறலாம்.
கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (ஜூலை 7) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாநகராட்சி ஆணையர் திருக்கட்டா ரவி தேஜா, ஐ.ஏ.எஸ்., தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் திருத்தம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரில் அளித்து தீர்வு காணலாம்.
மேலும், பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் திருக்கட்டா ரவி தேஜா, ஐ.ஏ.எஸ்., கேட்டுக் கொண்டுள்ளார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, தெரு மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் திருத்தம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரில் அளித்து தீர்வு காணலாம்.
மேலும், பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் திருக்கட்டா ரவி தேஜா, ஐ.ஏ.எஸ்., கேட்டுக் கொண்டுள்ளார்.