இந்தி திணிப்பு, நீட் தேர்வு ஆகியவற்றைக் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய அரசின் நீட் தேர்வு மற்றும் இந்தி திணிப்பு நடவடிக்கை ஆகியவற்றைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திமுக மாநில மாணவர் அணி செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர்  பழனிச்சாமி, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் இந்தி திணிப்பு நடவடிக்கை மற்றும் நீட் தேர்வு ஆகியவற்றிக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.



பின்னர், பேட்டியளித்த மாணவர் அணி செயலாளார் புகழேந்தி கூறுகையில், நீட் தேர்வின் மூலம் வடமாநில மாணவர்களை  மருத்துவ படிப்பில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வு போன்ற  நடவடிக்கைகளால் இந்தியா உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சர்வாதிகார போக்கு காரணமாக பாதிக்கப்படும் இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று திரண்டு கிளர்ச்சி செய்ய வாய்ப்பிருக்கின்றது" என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...