கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் தொடங்கி வைத்தார். நிலத்தடி நீர் வள மேம்பாடு, அடர்வனம் உருவாக்கம் மற்றும் தீவனப் பயிர் வளர்ப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொண்டம்பட்டி ஊராட்சியில், தனியார் தொண்டு நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகன்பாபு, ராஜேஸ்குமார், சரவணன், கலாராணி, வாட்டர் டெக் நிறுவனத்தின் தலைமை மனிதவள நிர்வாக அலுவலர் லயோனல் பால் டேவிட், தனியார் தொண்டு நிறுவனப் பணியாளர்கள், அலுவலர்கள், ஈஸ்வர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை வள மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக கொண்டம்பட்டியில் அடர்வனம் உருவாக்கும் பணி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வாட்டர் டெக் நிறுவனத்தின் பங்களிப்புடன் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், பயன்பாடின்றி இருந்த ஆழ்துளைக் கிணறுகளை மீளச் செயல்படுத்தும் கட்டமைப்புகள் மற்றும் புதிய நீர்வள வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், முன்பு பயன்பாடின்றி இருந்த நிலப்பரப்பு சுற்றுச்சூழலுக்கு பயனுள்ள பகுதியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மரக்கன்றுகளின் வளர்ச்சிக்குத் தேவையான நீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கால்நடைகளுக்கான தீவனப் பயிர்களும் வளர்க்கப்படவுள்ளன. அவை இப்பகுதி விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வளர்ச்சியையும் தொடர்ந்து கண்காணித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

முன்னதாக, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பச்சாபாளையம் ஊராட்சியின் தேகாணி பகுதியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 3.55 ஏக்கரில் தூர்வாரப்பட்ட குளத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் மற்றும் நிலத்தடி நீர் வள மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...