மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

Coimbatore:

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்த கும்பலை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெண்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டு கடும் வெயில் மற்றும் மழையிலும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த நேதாஜி நண்பர்கள் நற்பணி மன்ற இளைஞர்கள், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தவர்களை நேரில் மடக்கிப் பிடித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் காக்கும் மையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

மேலும், குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைத்ததாக கூறப்படும் பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டனர், அவர்களது பெற்றோர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய சிக்னல்களில் பச்சிளம் குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் தகவல் அளித்த போதிலும், சம்பவ இடங்களுக்கு குழந்தைகள் நல அதிகாரிகள் தாமதமாக வருவதாக சில இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, கோவையில் முக்கிய சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் கும்பல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...