சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் ஜூலை 15 வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.


Coimbatore:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மசக்காளிப்பாளையம் மற்றும் சுந்தராபுரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர்வதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் சேர தகுதியுடையவர்கள். விடுதிகளில் தங்கும் வசதி மற்றும் மூன்று வேளை உணவு உள்ளிட்ட வசதிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

சேர்க்கைக்கான தகுதிகளின்படி, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை தாண்டக்கூடாது. மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தது 8 கிலோமீட்டருக்கு மேல் தொலைவில் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியர்களுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடமோ அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ 15.07.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் அவற்றை வழங்கினால் போதுமானது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சிறுபான்மையினர் நல விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நலத்திட்ட சலுகைகளை பயன்படுத்தி தகுதியுடைய கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன் குமார் கிரியப்பனார் தெரிவித்துள்ளார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...