கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பணி முடிக்க அறிவுறுத்தினார். சிருங்கார் நகர் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27-க்குட்பட்ட சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் இன்று காலை போஸ்டர்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., உத்தரவின் பேரில் இப்பணி நடைபெற்றது.






வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாதவாறு, சுத்தம் செய்யப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் அறிவுறுத்தப்பட்டது.



இதேபோல், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு சிருங்கார் நகர் பகுதியில் சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். இப்பணியில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...