சூலூர் சிறுமி வழக்கு: சம்பவ இடத்திற்கு குற்றவாளியை அழைத்துச் சென்று விசாரணை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி கார்த்தியை சம்பவ இடமான கண்ணம்பாளையம் குளக்கரைக்கு அழைத்து வந்து போலீசார் கள விசாரணை மேற்கொண்டனர். மூன்று நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸ் காவலில் உள்ள முக்கிய குற்றவாளி கார்த்தியை சம்பவம் நடைபெற்ற கண்ணம்பாளையம் குளக்கரை பகுதிக்கு நேரில் அழைத்து வந்து தனிப்படை போலீசார் கள விசாரணை மேற்கொண்டனர்.

சிறுமி எவ்வாறு கடத்தப்பட்டார், சம்பவ இடத்திற்கு எப்படி அழைத்து வரப்பட்டார், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை எவ்வாறு நடைபெற்றது, பின்னர் உடல் எங்கு வீசப்பட்டது உள்ளிட்ட விவரங்களை கார்த்தியிடம் இருந்து பெற்று, வீடியோ பதிவுகளுடன் போலீசார் சாட்சியங்களை சேகரித்தனர்.

இந்த கள விசாரணை நடைபெற்றதை, சூலூர் DSP கரிகால் பாரி சங்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறைக்குள் தாக்குதலுக்கு உள்ளாகி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி மோகன்ராஜை மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க POCSO நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், இந்த விசாரணை நடைபெற்றது.


இதற்கிடையே, வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி சூலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

வழக்கில் தேவையான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் விரைவாக திரட்டப்பட்டு வருவதாகவும், இன்னும் அதிகபட்சம் மூன்று நாட்களுக்குள் முழுமையான குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்தில் குற்றவாளியிடம் நடத்தப்பட்ட கள விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வகையில் முக்கியமான தகவல்கள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...