காரமடை அருகே பேப்பர் கழிவுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

கோவை காரமடை அருகே 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி, முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், காரமடை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேவனாபுரம் பகுதியில், தனியார் காகித ஆலைக்கு பேப்பர் கழிவுகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



தேக்கம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் காகித ஆலைக்கு சென்னையில் இருந்து 23 டன் பேப்பர் கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. திருச்சியை சேர்ந்த துரை (40) என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

நேற்று அதிகாலை தேவனாபுரம் அருகே வந்தபோது, அதிக பாரம் காரணமாக லாரியின் முன்பக்க டயர் திடீரென வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் மோதி குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியில் ஏற்றி வந்த பேப்பர் கழிவுகள் சாலையில் சிதறின. மேலும், லாரி ஓட்டுநர் துரை லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்த நிலையில், நள்ளிரவு நேரமாக இருந்ததால் போக்குவரத்து குறைவாக இருந்தது. இதனால் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அதிக பாரம் காரணமாக முன்பக்க டயர் வெடித்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...