உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


கோவை: உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் உள்ள வணிக வரித்துறை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெரியநாயக்கன்பாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) பொன்னுசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அப்போது, புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், சமூக சீர்கேடுகள் மற்றும் அனைத்து வகையான புகையிலைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் விரிவாக விளக்கினார்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த விளையாட்டு மற்றும் தடகள வீரர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும், புகையிலை ஒழிப்பு குறித்த கையெழுத்து விழிப்புணர்வு இயக்கமும் நடத்தப்பட்டது.

புகையிலை இல்லா சமூகத்தை உருவாக்கும் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

சமூக நலன், பொது சுகாதாரம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...