கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து இன்று (ஜூன் 3) உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தமிழக அமைச்சரவையில்,பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளசம்பத்குமார் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் என அமைச்சரவையில் இருவர்இடம்பெற்றுள்ளனர்.


கோவை மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு அமைச்சர்கள் இருந்தாலும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசின் திட்டங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் வகையில் சம்பத்குமார் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள், அரசு நலத்திட்டங்கள், துறை சார்ந்த பணிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடனான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை அவர் மேற்பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற பதவி, மாவட்ட அளவிலான அரசு செயல்பாடுகளை ஒருங்கிணைத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் பிற அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவதை உள்ளடக்கியது. மேலும், கோவை போன்ற முக்கிய தொழில்துறை மற்றும் வணிக மையமாக விளங்கும் மாவட்டத்திற்கு இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...