கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது ஆணையாளராக பொறுப்பேற்றார். சிவகுரு பிரபாகரன், IAS பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசின் சமீபத்திய IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்ட கட்டா ரவி தேஜா, IAS இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கோவை மாநகராட்சியின் 30-வது ஆணையாளராக பதவியேற்றுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த M சிவகுரு பிரபாகரன், IAS, பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது இடத்தில் கட்டா தேஜா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ஆணையாளர் கட்டா தேஜா ரவி , நகர வளர்ச்சி மற்றும் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...