சாமி கும்பிடுவது போல் நடித்து வைசியாள் வீதி கோவிலில் தங்க நகைகள் திருட்டு: ஒருவர் கைது

கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், பக்தர் போல் நுழைந்த நபர் ஒருவர் வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த 12 கிராம் தங்கச் சங்கிலிகளை திருடிய சம்பவத்தில், சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் பெரிய கடை வீதி போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை வைசியாள் வீதியில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அம்மன் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 12 கிராம் தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்தில், போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இக்கோவிலில் கடந்த 12 ஆண்டுகளாக நரசிம்மர் (61) என்பவர் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம்போல் கோவிலைத் திறந்து பூஜைப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், காலை 7.20 மணி அளவில் வள்ளி மற்றும் தெய்வானை சிலைகளுக்கு பூஜை செய்வதற்காக சென்றபோது, சிலைகளின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தலா 6 கிராம் எடையுடைய இரண்டு தங்கச் சங்கிலிகள் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், வெள்ளை சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த ஒருவர், பக்தர் போல கோவிலுக்குள் நுழைந்து சாமி கும்பிடுவது போல் நடித்து, சிலைகளில் இருந்த தங்கச் சங்கிலிகளை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.

இதையடுத்து கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் கடை வீதி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகள் மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், டவுன்ஹால் பகுதியைச் சேர்ந்த சம்பத்குமாரின் மகன் செந்தில்பிரபு (45) என்பவரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவிலில் பக்தர் போல நடித்து தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...