கோவை நீதிமன்ற வளாகத்தில் நாய் துரத்தியதால் சுவரேறி குதித்த வடமாநில வாலிபர் பலி

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சி.சி.டி.வி. காட்சிகளில், நாய் துரத்தியதால் நீதிமன்ற சுவரேறி உள்ளே குதித்த அவர், இருட்டில் தடுமாறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை கோபாலபுரத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வடமாநில வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றிய ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீதிமன்றத்திற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை இருந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள், நீதிமன்றத்தின் பின்பக்க வாசல் அருகே வாலிபர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வந்த மருத்துவக் குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நீதிமன்ற வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

விசாரணையில், இன்று அதிகாலை அந்த வாலிபர் கோபாலபுரம் பகுதியில் நடந்து சென்றபோது நாய் ஒன்று அவரை துரத்தியது தெரியவந்தது. நாயிடமிருந்து தப்பிக்க அவர் நீதிமன்ற வளாகத்தின் பின்புற காம்பவுண்ட் சுவரில் ஏறி உள்ளே குதித்துள்ளார்.

அதன்பிறகும் பதற்றத்தில் வேகமாக ஓடியபோது, இருட்டில் எதிர்பாராத விதமாக கால் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வாலிபரின் சட்டைப் பையில் ரூ.250 மட்டும் இருந்ததாகவும், அடையாள அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவரது தோற்றத்தை வைத்து அவர் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், கோவையில் எங்கு தங்கி வேலை பார்த்து வந்தார் என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...