கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை: கோவை மாநகரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்கடம் பகுதி என்.எச். சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (50) மற்றும் ஹீராலால் (45) ஆகியோரை உக்கடம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கூல் லிப், ஹான்ஸ், மிராஜ், வி1 உள்ளிட்ட பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் மற்றும் ரூ.4,200 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், சாய்பாபா காலனி வெங்கடாபுரம் என்.எஸ்.ஆர். சாலையில் உள்ள ஒரு புத்தகக் கடையில் சோதனை நடத்திய போலீசார், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கணேஷ் குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மேலும், சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருகூர் சுங்கம் மைதானம் அருகே ஆவணி பேக்கரி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 44 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக சுதாகரன் (25) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...