கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மே 11 நிலவரப்படி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 11 ஆம் தேதி நிலவரப்படி பல அணைகளில் இருந்து கணிசமான அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி முழு கொள்ளளவு கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் மே 11 நிலவரப்படி 60.2 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 133 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் மே 11 நிலவரப்படி 32.9 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 76 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 1140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



வால்பாறை சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. மே 11 நிலவரப்படி 12.13 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 05 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. தொடர் நீர் வரத்தால் மே 11 நிலவரப்படி 22.8 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 393 கன அடி நீர் வரத்து உள்ளது.



உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. மே 11 நிலவரப்படி 40.82 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 709 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 257 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

Flights Temporarily Diverted to Kochi After Compound Wall Collapse Near Coimbatore Airport

Following heavy rain and strong winds in Coimbatore today evening, a section of the compound wall near Coimbatore Intern...

கனமழை எதிரொலி: கோவை விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் விமானங்கள் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது

கோவையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றால் சின்னியம்பாளையம் அருகே கோவை சர்வதேச விமான நிலைய சுற்றுச்சுவர் இடிந்து விழுந்...

“Jayalalithaa’s Soul Is Punishing the AIADMK,” Says TVK Minister Sengottaiyan in Coimbatore

TVK Minister Sengottaiyan  launched a sharp attack on the AIADMK, stating that the party’s ongoing internal turmoil was...

Simplicity News Impact: Coimbatore Airport Authorities Restore Drinking Water Facility

Passengers and members of the public appreciated the swift action taken by airport authorities to restore the malfunctio...

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...