பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நேரில் ஆய்வு செய்து, பில்லூர்-3 திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சமயபுரம் பகுதியில் அமைந்துள்ள பவானி தடுப்பணையில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி நிறுவனத்தின் சார்பில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், கோவை மாநகராட்சியின் பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தடையின்றி மற்றும் விரைவாக குடிநீர் வழங்கும் வகையில் பராமரிப்பு பணிகளை துரிதமாக நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.





இந்த ஆய்வின்போது தலைமை பொறியாளர் விஜயகுமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் பட்டன், தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ராம்சங்கர், உதவி செயற்பொறியாளர்கள் சத்தியமூர்த்தி, எழில், உதவி பொறியாளர்கள் ஜெயின்ராஜ், சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...