வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.


Coimbatore: வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்பாறை மலைப்பகுதி, ஜெயிலை தோட்டங்கள், வால்பாறை நகர்ப்பகுதி, கோட்டூர், ஆனைமலை, அங்கலக்குறிச்சி, காளியாபுரம், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்காக அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதில், வால்பாறை படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா மறுசீரமைப்பு செய்து விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பழைய மலைக்கள்ளன் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தபோது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரோப்வே கார் கேபிள் திட்டம் புதிதாக அமைக்கப்படும் என்றார்.

ஆனைமலை புலிகள் காப்பக எல்லைகள் மறுஅளவீடு செய்து, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கீழ்மட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறினார்.

இயற்கை சூழலை பாதிக்காத வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வனத்துறை வசூலிக்கும் பல்முனை நுழைவு கட்டணம் அதிமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். வால்பாறை பகுதியில் மாற்றுத்தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். நர்சிங் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கோட்டூர் பகுதியில் தென்னை சார்ந்த மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும். வால்பாறை மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் வசதியுடன் கூடிய நவீன அடுக்குமாடி கட்டமைப்புகள் உருவாக்கி நகர்ப்புற மேம்பாடு செய்யப்படும் என்றும் லட்சுமண சிங் தெரிவித்தார்.

முன்னதாக வால்பாறையில் அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் வால்பாறை சுற்றுலா வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பின்புமுடக்கியது என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...