கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பிடித்து, அவரிடமிருந்த ரொக்கப் பணத்துடன் தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது பணப்பட்டுவாடா புகார்களால் சூடுபிடித்துள்ளது.



இந்நிலையில், இன்று காலை கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வ.உ.சி வீதி பகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அப்பகுதியில் இருந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் கவனித்தனர்.

அவரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது, அருகிலிருந்த சாலைவழியாக தப்பிச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தயிரிட்டேரி, புதுப்பாலம் அருகே அவரை மடக்கிப் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பிடிபட்ட நபரிடம் விசாரித்தபோது, அவர் கரூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்றும், பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

அவரது பையில் இருந்த சுமார் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை கூட்டணி கட்சியினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், பணத்தையும் அந்த நபரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கோவை வடக்கு தொகுதியில் கரூரில் இருந்து வந்த குழுவினர் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்படுகின்றனர் என ஏற்கனவே குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...