கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.


Coimbatore: கோவை மாநகர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ராமநாதபுரம் பகுதி வார்டு எண் 66 உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார்.








கொண்டசாமி லே-அவுட், புளியகுளம், அண்ணா நகர் 1வது வீதி, அண்ணா நகர் 2வது வீதி, அண்ணா நகர் 3வது வீதி, அம்மன் குளம் வடக்கு பகுதி, G.H. காலனி 1வது வீதி, G.H. காலனி 2வது வீதி, அம்மன் குளம் ரோடு AIRTEL ஆபிஸ் ரோடு, ராஜீவ் நகர், பழைய ஹவுசிங் யூனிட், எரிமேடு முதல் பகுதி, புது ஹவுசிங் யூனிட், எரிமேடு இரண்டாவது பகுதி மற்றும் பாலசுப்பிரமணியம் நகர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.






வாக்கு சேகரிப்பின்போது அம்மன் கே.அர்ஜுனன் பேசியதாவது: "நிர்வாகத் திறனற்ற Stalin தலைமையிலான DMK ஆட்சியில், கடந்த ஐந்தாண்டு காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம்போல் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது."






"மக்களின் இந்தச் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க இந்த நிதி உதவி பயன்படும்" என்று அவர் தெரிவித்தார்.






இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், அதிமுக ஆட்சி அமைந்தால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். வாக்கு சேகரிப்பில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருடன் இருந்தனர்.


Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...