கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 சிறப்பு உதவித் தொகை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார்.


Coimbatore: கோவை மாநகர் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ராமநாதபுரம் பகுதி வார்டு எண் 66 உட்பட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்தார்.








கொண்டசாமி லே-அவுட், புளியகுளம், அண்ணா நகர் 1வது வீதி, அண்ணா நகர் 2வது வீதி, அண்ணா நகர் 3வது வீதி, அம்மன் குளம் வடக்கு பகுதி, G.H. காலனி 1வது வீதி, G.H. காலனி 2வது வீதி, அம்மன் குளம் ரோடு AIRTEL ஆபிஸ் ரோடு, ராஜீவ் நகர், பழைய ஹவுசிங் யூனிட், எரிமேடு முதல் பகுதி, புது ஹவுசிங் யூனிட், எரிமேடு இரண்டாவது பகுதி மற்றும் பாலசுப்பிரமணியம் நகர் ஆகிய பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.






வாக்கு சேகரிப்பின்போது அம்மன் கே.அர்ஜுனன் பேசியதாவது: "நிர்வாகத் திறனற்ற Stalin தலைமையிலான DMK ஆட்சியில், கடந்த ஐந்தாண்டு காலமாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி விஷம்போல் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சொத்து வரி, வீட்டு வரி, மின்சார கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட குடும்பச் செலவு பன்மடங்கு அதிகரித்துவிட்டது."






"மக்களின் இந்தச் சுமையை குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க இந்த நிதி உதவி பயன்படும்" என்று அவர் தெரிவித்தார்.






இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்த அவர், அதிமுக ஆட்சி அமைந்தால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். வாக்கு சேகரிப்பில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருடன் இருந்தனர்.


Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...