வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் அவமதிக்கப்பட்டதை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வின் போது விதிமுறைகள் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அலைகழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடை சோதனை என்ற பெயரில் அகற்றப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும், தேர்விற்கு முழுக்கை சட்டை அணிந்து சென்ற மாணவர்களின் சட்டைகள் வெட்டப்பட்டன. மேலும், நீட் வினாத்தாள்  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், மாணவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

அப்போது மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வின் போது மாணவர்களை மன அழுத்திற்கு உள்ளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...