ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழகம் "Institutional Excellence" விருதை வழங்கி கௌரவித்தது. மாணவர்களின் புதுமைத்திறன் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அங்கீகரித்து வழங்கப்பட்ட விருதை முனைவர் பி.எல்.சிவக்குமார் பெற்றுக்கொண்டார்.


Coimbatore: எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு குஜராத்தின் சூரத்திலுள்ள ஆரோ பல்கலைக்கழகம் "Institutional Excellence" விருதை வழங்கி கௌரவித்துள்ளது. மார்ச் 24 ஆம் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது.




ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நடைபெறும் ஹேக்கத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று சாதனைகள் படைத்து வருகின்றனர். அண்மையில் சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற Smart India Hackathon போட்டியில் பொறியியல் கல்லூரிகளுடன் போட்டியிட்டு முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் பங்கேற்ற அணிகளுள் கலை அறிவியல் கல்லூரி அணி இது ஒன்று மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.




அதேபோன்று, சர்வதேச அளவில் இஸ்ரேல் Ariel பல்கலைக்கழகம் நடத்திய Israel Hackathon போட்டியில் இந்தியா சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி பங்கேற்று வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு இணையாக தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்வியாளர்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வருகின்றனர்.




வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப செயற்கை நுண் णறிவு, Machine Learning மற்றும் Cyber பாதுகாப்பு போன்ற துறைகளில் புதுமையான தீர்வுகளை மாணவர்கள் வழங்கி வருகின்றனர். புதுமைத்திறன், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நடைமுறை சிக்கலைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.




IBM நிறுவன தொழில்நுட்ப நிபுணர் ஆய்வகம், நாட்டின் மேலாளர் Jagadisha Bhat அவர்கள் "Institutional Excellence" விருதினை வழங்க, கல்லூரியின் சார்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் Dr B.L. Sivakumar பெற்றுக்கொண்டார்.




"Institutional Excellence" விருதினைப் பெற்று தந்த கல்லூரியின் மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களுக்கும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr Sundar Ramakrishnan பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Newsletter

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...